கரூர், மே 6: கரூர் சுக்காலியூர் மேம்பால நடைமேடைகளை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் சுக்காலியூர் அருகே அமராவதி ஆறு குறுக்கிடுகிறது. இந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையின் சில பகுதிகளில் உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும் இந்த மேம்பாலத்தை ஒட்டியுள்ள நடைமேடையில் பழுதடைந்த நிலையில் உள்ளதை பார்வையிட்டு விரைந்து சரி செய்ய வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு நடைபாதையை சீரமைத்து, பாதசாரிகள் எளிதாக நடந்து செல்ல தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கரூர் சுக்காலியூர் மேம்பால நடைமேடை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.